Header Ads



"மாட்டிறைச்சி சாப்பிட்டது, தெய்வ குற்றம்" மாவனெல்லையில் 28 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட இளைஞர் மரணம் (படம் இணைப்பு)

உணவின்றி 28 நாட்கள் வீட்டின் அறையொன்றுக்குள் அடைத்து வைக்கப்பட்ட இளைஞனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது.

மாட்டிறைச்சி உட்கொண்டமை தெய்வக் குற்றமெனக் கூறியே குறித்த இளைஞனை அவனது பெற்றோர்கள் உணவின்றி அவனது அறையில் அடைத்து வைத்திருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

31 வயதான குறித்த இளைஞன் நண்பர்களுடன் விருந்துபசாரமொன்றுக்கு சென்ற வேளையிலேயே மாட்டிறைச்சியை உட்கொண்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் தனது பெற்றோருக்கு அவ்விளைஞன் தெரிவித்துள்ளார்.

இதன்போது இளைஞனின் வீட்டில் தங்கியிருந்த தேவாலயமொன்றில் கடமை புரியும் ஒருவர் மாட்டிறைச்சி உண்பது தெய்வக் குற்றம் என தெரிவித்துள்ளதுடன் , அவரை 28 நாட்கள் உணவின்றி வீட்டில் அடைத்து வைத்து தண்டனை வழங்கும் படி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே அவ்விளைஞனை பெற்றோர்கள் பட்டினி போட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இளைஞனை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்த போதிலும் அது பயனளிக்கவில்லையென உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை , குறித்த இளைஞன் இரு வாரங்களுக்கு முன்னர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாகவும் , இதன் பின்னர் நாட்டு வைத்தியம் மேற்கொண்ட போன மரணம் நிகழ்ந்துள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.