Header Ads



தேவைப்படும் பணத்தை நான் தருகிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம் - கோத்தபய

-நஜீப் பின் கபூர்-

தேசியக் கொடியை அவமதித்தமைக்காக தற்போது நீதி மன்றங்களுக்கு போய் வருகின்ற ராஜபக்ஷ விசுவாசிகள் வருகின்ற தவணையில் தமக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதிக்கலாம். தமது விடுதலைக்காக  நீதிமன்றம் பெருந் தொகையான பணத்தைப் பிணைத் தொகையைக் கோரலாம் என்று ஒரு கூட்டம் போட்டுஇதற்கான பணத்தைத் திரட்டுவதற்காக கதைத்திருக்கின்றார்கள்.

இந்த சந்திப்பு நடந்த இடத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவும் இருந்திருக்கின்றார். எவரும் இது விடயத்தில் கவலைப்பட வேண்டாம் தேவைப்படுகின்ற தொகையை நான் பார்த்து கொள்கின்றேன் என்று அங்கு அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றார். புரிகின்றதா புதிய தேசிய கொடியின் கதை!  

1 comment:

  1. உள்ளே தள்ளுங்கள் இந்த தேச துரோகியை

    ReplyDelete

Powered by Blogger.