Header Ads



பிர­த­ம­ராக மஹிந்­த­ வந்தால், என்ன செய்வார் என எனக்குத் தெரியும் - ஜனா­தி­பதி மைத்­தி­ரி­

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் ஒற்­று­மையைக் கட்­டிக்­காப்­ப­தற்கு நான் தயா­ராக உள்ளேன். ஒற்­று­ மையைக் கட்­டிக்­காக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை வெற்­றிப்­பா­தையில் இட்டுச் செல்­வ­தற்கு பிர­சார நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­ப­தற்கு மஹிந்­த ­ரா­ஜ­பக்ஷ தயா­ரானால் ஒன்­றி­ணைந்து இத்­த­கைய செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வ­தற்கு தயா­ராக உள்ளேன். ஆனால் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு மஹிந்­தவை ஒரு­போதும் அனு­ம­திக்கமாட்டேன் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த பேச்­சு­வார்த்­தையின் போது எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்­பது உட்­பட நான்கு விட­யங்கள் தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் ஜனா­தி­ப­தி­யுடன் விரிவான பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

இந்த சந்­திப்பில் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலைவர் வாசு­தே­வ­நா­ண­யக்­கார, தேசிய காங்­கி­ரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதா­வுல்லா, இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்­து­சி­வ­லிங்கம், லங்கா சம­ச­மா­ஜக்­கட்­சியின் தலைவர் திஸ்­ஸ­வி­தா­ரண, கம்­யூனிஸ்ட் கட்­சியின் தலைவர் டி.யூ. குண­சே­கர, தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் வீர­கு­மார திஸா­நா­யக்கஇ ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் பிர­பா­க­ணேசன், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் சுசில்­பி­ரே­ம­ஜ­யந்த, ஈ.பி.டி.பி. யின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

பிர­தமர் வேட்­பா­ள­ராக எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவை நிய­மிக்­க­வேண்டும் இதன் மூலமே கட்­சியின் ஒற்­று­மை­யினை கட்­டிக்­காக்க முடியும் என்று கூட்­டுக்­கட்­சியின் தலை­வர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். இதன் போது கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் எமது கட்­சியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவை போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன். அவர் வெற்றி பெற்று பிர­த­ம­ராக வந்த பின்னர் என்ன செய்வார் என்­பது எனக்குத் தெரியும். திரும்­பவும் அவர் ஜனா­தி­ப­தி­யாக முயல்வார்.

கட்­சியின் ஒற்­று­மையைக் கட்­டிக்­காப்­ப­தற்கு நான் தயா­ராக உள்ளேன். அடுத்த பொதுத்­தேர்­தலில் கட்­சி­யினை வெற்­றி­பெறச் செய்­வ­தற்கு மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டலாம். அவ­ருடன் இணைந்து பிர­சா­ரத்தை மேற்­கொண்டு கட்­சியை வெற்­றிப்­பா­தையில் இட்டுச் செல்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன். இந்த விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

இந்த சந்­திப்பில் . எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் அனைத்து பங்­காளிக் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து பல­மான கூட்­ட­ணி­யாக கள­மி­றங்­கு­வது, தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது, பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் 14 பங்­காளிக் கட்­சி­களை ஒன்­றி­ணைந்து இம்­முறை பொதுத் தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்­பிலும் ஜனா­தி­ப­தி­யுடன் இவர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். பொதுத் தேர்­தலில் பழைய கூட்­ட­ணியை உரு­வாக்க வேண்டும். இதில் ஜாதிக ஹெல உறு­மய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உள்­ளிட்ட ஏனைய பங்­காளிக் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைப்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

அதேபோல் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் தேர்தல் முறை­மையில் மற்றம் கொண்­டு­வ­ரு­வதன் சாத்­தி­யப்­பாடு தொடர்பில் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்­ளனர். 20ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் அதேபோல் சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­களை பாதிக்­காத வகையில் எவ்­வா­றான மாற்­றங்கள் கொண்­டு­வ­ரு­வது என்­பன தொடர்­பிலும் இவர்கள் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

அதேபோல் முக்­கி­ய­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார உள்­ளிட்ட குழு­வினர் ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­துள்­ளனர். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் சார்பில் 70 க்கும் அதி­க­மான உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வதை ஆத­ரித்­துள்­ள­துடன் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை முன்­வைக்கப் போவ­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இவ்­வி­டயம் தொடர்பில் எவ்­வி­த­மான கருத்­துக்­க­ளையும் முன்­வைக்­க­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­யினர் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது மற்றும் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வது தொடர்பில் அக்­கறை காட்­டி­யுள்­ள­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணை­யினை கொண்டு வரு­வது மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வது தொடர்பில் எவ்­வித கருத்­து­க­ளையும் தெரி­விக்­க­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

No comments

Powered by Blogger.