"புடலங்காய் அரசாங்கம்"
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த 58 லட்சம் வாக்குகளை 70 லட்சம் வரை உயர்த்துவதற்கு செயற்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயாராமவில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முழு நாட்டிற்கும் கெட்ட காலம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவடைய செய்தது மைத்திரி பின்னால் சென்றவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் புடலங்காய், பீர்க்கங்காய் அரசாங்கம் என அவர் சாடியுள்ளார்.
இந்தியாவிற்கு விரும்பியது போன்று தற்போது இந்நாடு செயற்படுவதாக முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் வடக்கு முதல்வருக்கு விரும்பியது போன்றே நடந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் இடம்பெறும் அசம்பாவிதங்களை விட தற்போது வடக்கில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் குறித்தே ஆராய்வதற்கு ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயாராமவில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முழு நாட்டிற்கும் கெட்ட காலம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவடைய செய்தது மைத்திரி பின்னால் சென்றவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் புடலங்காய், பீர்க்கங்காய் அரசாங்கம் என அவர் சாடியுள்ளார்.
இந்தியாவிற்கு விரும்பியது போன்று தற்போது இந்நாடு செயற்படுவதாக முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் வடக்கு முதல்வருக்கு விரும்பியது போன்றே நடந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் இடம்பெறும் அசம்பாவிதங்களை விட தற்போது வடக்கில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் குறித்தே ஆராய்வதற்கு ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment