Header Ads



சுதந்திரகட்சியை பிளவுப்படுத்துவதாக சிலர் என்னை தூற்றுகிறார்கள் - மஹிந்த ராஜபக்ச

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி நடத்துவது, பஞ்ச சக்திகளும் ஒன்று சேரும் இடத்தை தவிர கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதப்புரம் சேனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்ரசேனவின் இல்லத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திபிபல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியை பிளவுப்படுத்துவதாக சிலர் தம்மை தூற்றுகிறார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்காகவே தாம் கலந்துரையாடல்களை நடத்துகின்றேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் ஆட்சி நடத்துவது டார்லி வீதியில் உள்ள அலுவலகத்தில் அல்ல. பஞ்ச சக்திகளும் கூடும் இடத்திலே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி நடத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.