Header Ads



இலங்கை, மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின் (ஒற்றுமைகள்)


(ARM INAS)

1.மியன்மாரில் பொது இடங்களில் புத்த பிக்குகள் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு முஸ்லிம் எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் பரப்ப்பட்டது
1.இலங்கையில் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பொதுபலசேனாவால் கூட்டங்கள் நடாத்தப்பட்டு அதன் மூலம் முஸ்லிம் வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டது. பன்சலைகளில் தஹம் பாசல்களில் குழந்தைகளுக்கு ஹலால் எதிர்புணர்வு, முஸ்லிம் எதிர்ப்புணர்வு வளர்க்கப்பட்டது.

2.மியன்மாரில் முஸ்லிம்கள் படகில் வந்தவர்கள் அவர்கள் நாடடின் பிரஜைகள் என்ற கருத்து வேகமாக பரப்பப்பட்டது
2.அதே கருத்தை பொதுபலசேனா இலங்கையில் பரப்பியது 
இலங்கை முஸ்லிம்கள் வந்தேறுகுடிகள் என்ற கருத்தை

3.பௌத்த பெண் கற்பழிக்கப்பட்டால் என்ற போலி குற்றச்சாட்டால் 2012 மியன்மாரில் பெரும் கலவரம் உருவாக்கப்பட்டு  முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு  முஸ்லிம்களின் சொத்துக்களும் சூரையாடப்பட்டது. பொய்யான கற்பழிப்பு சம்பவத்தை உண்மையாக்கி அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

3.தர்கா டவுனில் முஸ்லிம்கடை ஒன்றில் முஸ்லிம் ஒருவரால் பௌத்த சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டான் என்று பொய்யான குற்றச்சாட்டு பொலிஸில் பதிவு செய்யப்பட்டது அது பொய் குற்றச்சாட்டு என நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இலங்கையின் சில முக்கிய சிங்கள ஊடகங்கள் இதனை உண்மையாக்கி காட்டியது. குறிப்பிட்ட கடை சிங்கள இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது.

3. இந்த சம்பவத்துடன் சேர்த்து பொய் சம்பவங்கள் பலவற்றை சேர்த்து ஞானசார ஆற்றிய இனவாதத்தை தூண்டும் உரையால் தர்கா நகர் மீது அரசின் அணுசரனையுடன் சொத்தழிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனை நாடு முழுவதும் பரப்புவதற்கான திட்டங்கள் இருந்ததெனினும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக கைவிடப்பட்டது

4. மியன்மாரில் அரசின் முழு அணுசரணை பௌத்த இனவாதிகளுக்கு இருந்தது
4. இலங்கையிலும் அதே நிலை தான் இருந்தது.

5. மியன்மார் படுகொலைகளின் சூத்திரதாரி அசின் விராதுவுக்கு எந்த நாடும் வீஸா வழங்கவில்லை. அவன் மகா பாதகன் என்பதால். ஆனால் மகிந்த அரசு அந்த வெறிநாய்க்கு வீஸா வழங்கி இலங்கைக்குள் அவனை அனுமதித்தான். விராது இலங்கையில் உரையாற்றும் போது முதலில் நன்றி தெரிவித்தது மகிந்தவுக்கு தான்.

மியன்மார் இனவாதிகளினதும், இலங்கை இனவாதிகளினதும் திட்டம் ஒன்று தான். அதில் எந்த வேறுபாடும் இல்லை. பல ஒற்றுமைகளில் சிலதை மட்டுமெ பதிந்துள்ளேன். மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் மியன்மாரின் திட்டங்கள அனைத்தும் அப்படியே இலங்கையிலும் அரங்கேற்றப்பட்டிருக்கும்.

இந்த அபாயம் இன்னும் இருக்கிறது..!

இலங்கை முஸ்லிம்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்..!
முஸ்லிம்கள் தேசிய கொடியை உடம்பில் போர்த்திக்கொள்வதால் இனவாதம் ஒழியாது..!
போலி வேஷங்களை விட்டுவிட்டு, இனவாதத்தை ஒழிக்க உருப்படியான நடவடிக்கைகளை எடுப்போம்..!!

No comments

Powered by Blogger.