சூரிச் நகரில் வாழும், இலங்கையர்களின் கவனத்திற்கு..!
31ம் திகதி நாள்முழுவதும் மாத்திரமல்லாது மறுநாள் யூன் முதலாம் திகதி அதிகாலை 5 மணிவரை இந்த இலவச போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்பட உள்ளன.
சூரிச் பொது போக்குவரத்துச் சேவையானது இந்த இலவச போக்குவரத்து சேவைகளை வழங்கவுள்ளது.
சூரிச் பொது போக்குவரத்துச் சேவையின் 25 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டும் தமது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இலவச போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிச் நகரில்,31ம் திகதியும் மறுநாள் யூன் முதலாம் திகதி அதிகாலை 5 மணி வரையும் ரயில், பேருந்து,படகு மற்றும் கேபிள் கார் உட்பட அனைத்து பொது போக்குவரத்துச் சாதனங்களிலும் மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.
ZVV வலையமைப்பு உள்ள பிராந்தியத்தில் மாத்திரமே இந்த இலவச போக்குவரத்துச் சேவை வழங்கப்படவுள்ளது.
Post a Comment