கண்டி ஆஸ்பத்திரியில் திடீர் தீ, பதறியடித்து ஓடியதில் 70 பேர் காயம்
-எம்.ஏ.அமீனுல்லா-
கண்டி பெரியாஸ்பத்திரியின் 49வது வார்ட் பகுதியில் நேற்று அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 70 நோயாளர்கள் காயங்களு க்குள்ளாகினர். வார்டை விட்டு வெளியேற ஒருவரை ஒருவர் முண்டிய டித்துக் கொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே இவர்கள் காயம டைந்தனர். குறித்த 49 வார்ட்டில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Post a Comment