Header Ads



சஜித் பிரேமதாஸவிற்கு, எதிராக 4 முறைப்பாடுகள்

சமுர்த்தி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியை தனது அரசியல் நண்பர்களுக்கு வழங்கியதாகக் கூறி வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் 4 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமுர்த்தி திட்டத்தை அழித்தல், சமுர்த்தி ஊழியர்களுக்கு சேமலாபம் வழங்காமை, புதிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்காமை மற்றும் உறுதி அளித்தபடி மோட்டார் சைக்கிள் வழங்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சஜித் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்து குற்ற ஒழிப்பு பிரிவிற்கு முன்னதாக செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

முறைப்பாடு நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.