Header Ads



வெளிநாடுகளில் இருந்து, இலங்கையின் அரச வங்கிகளில் 400 லட்சம் ரூபா பண மோசடி

போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் அரச வங்கிகளில் போலி வங்கி கணக்குகள் மூலம் 400 லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் குற்றத்தடுப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது.

இவ்வாறு மோசடி செய்தவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.