15 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்களை, இலங்கைக்கு வழங்கிய சவுதி அரேபியா
ரமழான் பண்டிகையை முன்னிட்டு, சவுதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பேரீச்சம் பழங்கள், சவுதி தூதரகத்தால், நேற்று மாலை இஸ்லாமிய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து வௌியிட்ட சவுதித் தூதுவர் கூறியுள்ளார்.
Post a Comment