Header Ads



முஸ்லிம்களுக்கும் பொருந்தி வரும்...!

(மனோ கனேசனின் பேஸ்புக்கிலிருந்து)

<ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15) ......

கடந்த ஐந்து நாட்களாக தூக்கமில்லை. நள்ளிரவுவரை கலந்துரையாடல். எந்த ஒரு புதிய தேர்தல் முறை மாற்றத்திலும், தென்னிலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு, தொகுதி மீள் நிர்ணயம் கட்டாயம் வேண்டும் என்பதை, ஜனாதிபதி, பிரதமர், சந்திரிகா குமாரதுங்க, தேர்தல் ஆணையாளர், ஏனைய சிங்கள கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்ட கூட்டங்களில், அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட வேண்டியவர்களுக்கு புரியும்படி சொல்லி விட்டேன். அதாவது கொழும்பு, நுவரேலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய ஒரு இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் புதிய பல்-அங்கத்தவர் தொகுதிகள் வேண்டும், இல்லாவிட்டால் மாற்றம் வேண்டாம் என்பது என் கோரிக்கை. இவற்றுக்கு மறுக்க முடியாமல் இவர்கள் தலையாட்டியுள்ளார்கள். என் கோரிக்கை தென்னிலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தி வரும். இத்துடன் இதை நான் விடப்போவதில்லை. இதை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...!

2 comments:

  1. great.. நிகழ்கால அரசியல் வாதிகளில் சிறந்த அரசியல் வாதி. நாங்கள் உங்களை மதிக்கிறோம் மனோ.

    ReplyDelete

Powered by Blogger.