Header Ads



சோபித தேரர் சத்தியாகிரக போராட்டத்தில் குதிக்கிறார்..!


நீதிக்கான சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், நாளை முற்பகல் 10 மணிமுதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

19வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை இந்த சத்தியாக்கிரகத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக பிரஜைகள் சக்தியின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதற்கான 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் சோபித தேரர் போராட்டங்களை நடத்தி வந்தார்.

இதன் அடிப்படையிலேயே மைத்திரி- ரணில், பாட்டலி, அனுர திஸாநாயக்க கூட்டமைப்பை அவர் உருவாக்கினார்.

இந்தநிலையில் தற்போது 19வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமையை அடுத்தே தேரர் சத்தியாக்கிரக போராட்ட முடிவை அறிவித்துள்ளார்.

இதேவேளை 19வது திருத்தம் விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.