இரவு வேளையில், அலரி மாளிகையில்...!
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பஷில் ராஜபக் ஷ கைது செய்யப்பட்டிருப்பதையடுத்து அவரது ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவ்வாறான அதாவது பொது நடவடிக்கைகளுக்கு எதிரான எத்தகைய செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என அரசாங்கம் பொலிஸாரை அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை பாராளுமன்றத்தை மே மாதம் ஐந்தாம் திகதி கலைத்து விடுவதற்கும் அதன் பின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று புதன்கிழமை இரவு அலரிமாளிகையில் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த இருவர் இன்றும் நாளையும் கைதுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அலரிமாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிஸ்தர்களின் கலந்துரையாடல் ஒன்றின்போது மேற்கண்ட தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் புதிய தேர்தல் முறையில் அல்லாது பழைய முறைமையிலேயே பாராளுமன்றத் தேர் தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரை யாடப்பட்டுள்ளது.
Post a Comment