Header Ads



மதம் மாற்றும், மட்டக்களப்பு மோகன்..!

-முஹம்மது நியாஸ்-

செங்கல்லடிப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வும் துவேஷ எண்ணமும் கொண்ட ஓர் இனவாதியான செல்லம் திரைப்பட மாளிகை உரிமையாளரும் செங்கல்லடி வர்த்தக சங்கத் தலைவருமான மோகன் மேற்கொண்டுவருகிறார்.

இந்த மோகன் என்பவரைபற்றித் தெரியாதவர்களுக்கு ஓர் சிறு அறிமுகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றொரு இயக்கத்தை ஆரம்பித்து அதன்பிறகு அவ்வியக்கத்திலிருந்து பிரிந்து திராவிடன் சேனை என்றொரு இயக்கம் உருவானது. தற்போது அவ்வியக்கத்திற்கு தலைமை தாங்கி வருபவர்தான் இந்த தியேட்டர் மோகன் என்பவர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அன்று தொடக்கம் முஸ்லிம்களை கருவறுப்பதையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்த இந்த புலிப்பினாமியின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவகையானவை.
அதில் ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் உறுகாமத்திலுள்ள இந்திய வீட்டுத்திட்ட திறப்புவிழா நிகழ்ச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே முஸ்லிம்கள் மீதான தனது இனத்துவேஷத்தை வெளிப்படுத்துகின்ற துண்டுப்பிரசுரம் ஒன்றை மிகவும் பகிரங்கமாகவே வெளியிட்டார்.

அத்தோடு அந்நிகழ்வில் இருந்து சில மாதங்கள் கடந்த நிலையில் உறுகாமத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடைத்தொகுதியும் முச்சக்கர வண்டியும் தீக்கிரையாக்கப்பட்டது. இச்சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியாக தியேட்டர் மோகனே இருக்கலாம் என பலமான சந்தேகம் நிலவிவருகிறது. காரணம், ஆரம்பகாலம் தொட்டே உறுகாமம் வாழ் முஸ்லிம்களுக்கு தியேட்டர் மோகனால் பலவழிகளில் அச்சுறுத்தல் இருந்தே வந்திருக்கிறது.

மேலும் 2012ம் ஆண்டு புனித ரமழான் மாதம் இறுதிப்பகுதியில் உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் ஓர் இரவு நேரத்தில் முஸ்லிம் பெண்ணொருவர் கோடாலியால் வெட்டப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதே இரவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் ஐந்து வீடுகளும் ஒரு வியாபார நிலையமும் உட்பட ஜும்மா பள்ளிவாயில் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் மேற்குறித்த இனவாதி மோகனே சம்பந்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

இவ்வாறு முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம், கலாச்சாரம், இருப்பிடங்கள் போன்றவற்றை சூறையாடுவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்ற ஓர் இழிபிறவியான இந்த மோகனே தற்போது நடைபெற்றுவருகின்ற கலப்புத் திருமணங்களையும் முன்னின்று நடத்திவைப்பதை யதார்த்தமாகவே அவதானிக்கமுடிகிறது.

இவ்வினவாதியின் சதிவலையில் இஸ்லாமியப்பெயர் தாங்கிகளேதான் விழுந்தாலும் இதை வைத்து முஸ்லிம்களை எள்ளிநகையாடி ஆத்திரமூட்டி மீண்டும் ஓர் இனக்கலவரத்திற்குத் தூபமிடுவதே இதன் முக்கியநோக்கமாகும். ஏனெனில் செங்கல்லடியில் அதிகமாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற ஊர்களிலிருந்து வருகின்ற முஸ்லிம் வியாபாரிகளே.ஏற்கனவே ஓர் தடவை முஸ்லிம் வியாபாரிகளிடம் தமிழ் மக்கள் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் எனப்பிரச்சாரம் செய்ததும் இவ்வினவாதி மோகன்தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

அதுமாத்திரமல்லாது செங்கல்லடியில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற முஸ்லிம்வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்விதமாக அவர்களையும் தனது வலையில் சிக்கவைத்து திருமணம் (?) முடித்து வைக்கின்ற புதிய திட்டம் ஒன்றையும் தீட்டிவருவதாக சிலதகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் ஒன்றுதான் முஸ்லிம் வியாபரிகளிடத்தில் கடனாக பொருட்களை கொள்வனவு செய்கின்ற தமிழ்ப்பெண்கள் அவ்வியாபாரிகளை கடனை வசூலிப்பதற்காக தமது வீடுகளுக்கு வரவைத்து அவர்களுடன் தமக்கு தொடர்பிருப்பதாகக் கூறி பொறியில் சிக்கவைக்கும் ஓர் நூதனமான திட்டமாகும்.

15 comments:

  1. மட்டக்களப்பு இனவாதி மோகனே! இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை 1400 வருடங்களுக்கு முன்பு எமது உத்தம நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள கூற்றை படித்துப் புரிந்துகொள்.

    இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.
    இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

    ReplyDelete
  3. இறைவன் நோ்வளி காட்டுவான் மோகன்

    ReplyDelete
  4. இந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக நியம விதிகளுக்கு ஏற்ப இல்லை என்று புரிகின்றது. மேலே சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமான குற்றச்சாட்டுக்கள், அவ்வாறெனில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்டுரை எழுதுவது நேர்மையான செயலல்ல.

    அடுத்து, கடனுக்கு சாமான் கொடுத்துவிட்டு, கடனை வாங்க, ஆண்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு போகின்றோம் என்று சொல்வது சிறு பிள்ளைத் தனமானது. கொடுத்த கடனை திருப்பி வாங்கப் போகின்றார்கள் உள்ளாடையுடன் மட்டுமா போகின்றார்கள்? சிங்கள ஊர்களில் மாட்டி அடி வாங்கும் பொழுதும் இதே கதையைத் தானே சொல்கின்றார்கள், கடன் காசை வாங்கப் போனேன் என்று.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Tamilala ondu searunga makkalee muslim mo hindu vo enamella matham

    ReplyDelete
  7. lanka cool kavalai padathevai illa. intha mohanalo allathu entha mohanalum islam maarkathil oru masirum pudunga elathu....

    ReplyDelete
  8. Mr Nizar ,அடுத்தவர் மதத்தை நிந்தித்துப் பேசாத ,நடுநிலையாக கருத்துக்கள் சொல்லும் மாற்று மத மக்களும் நம் நண்பர்களே.சொல்லுபவனை பாராதே சொல்லுவதை பார் (அலி ரழியாழ்ல்ஹு சொன்னது) little start சொல்வது ஓரளவு சரியானதே. இவ்வளவு நடந்தும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத காரனம் என்ன ?
    1. இந்த திருமணம் கட்டாயத் திருமணமாக இருந்திருந்தால் சட்டத்தில் செல்லுபடியாகது.
    2. ஆண்கள் இல்லாத நேரத்தில் ,அந்நிய(மகரமி அல்லாத) பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு செல்வது முற்றிலும் தவிர்க்க படவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  9. நன்றி கணம் VR METHUSAN உங்களைப்போன்ற உள்ளங்கள் ஒன்றாவது உள்ளவரை கேடு இல்லை இவ்வையகத்துக்கு, கடந்த இரத்தக்கறை படிந்த கசப்பான காலங்களை நாம் மறக்கவே கூடாது துவேசத்தை மறந்திடுவோம் துல்லியமான எதிர்காலத்தை எம் சிறார்களுக்கு விதைத்திடுவோம், நாம் தமிழ் பேசும் மக்கள் எமது பிரட்சினைகள் பெரும்பாலும் ஒற்ற பண்புடையதே வாழ்க தமிழ் வாழ்க இம்மண்னின் ஒற்றுமை..

    ReplyDelete
  10. No one can criticize the comments of little star or anyone else don't raise racism please, as long as little star models exist in such forum the forum can be a perfect, others opinion should be welcomed,, Islam never says to criticize others because of his race or religion or language or color one day Mr. Mohan can be converted even to Islam who knows. If Mohan is against to Islam then God is more than enough and also people power will not give-up him for long-time.

    ReplyDelete
  11. அதுக்கு நீங்க ஏண்டா சண்ட பிடிக்கிறிங்க.

    ReplyDelete
  12. We Tamils doesn't trust Muslims because you are anyway don't trust Tamils.so why we should earn your trust???

    If one Muslim person get caught red handed while selling drugs it's entire muslim community called as drug dealer although it's not true..that time you will scream. You should comment about Mohan rather than Tamil community. Hope you will grew up.

    ReplyDelete
  13. உண்மை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விடுத்து அதை சொல்பவரின் அடையாளத்தை கேள்விக்குட்படுத்தி சொறிதல் சுகம் காணுவதில்தான் சிலருக்கு ஆர்வம் உள்ளது.

    ReplyDelete
  14. We got to be very careful and balanced in our comments and let us first resolve our differences and mistakes. We will have to seek ways and means to build a peaceful, understanding and tolerant society based on our noble values and universal brotherhood. Tamils, Muslims and Sinhales are all from the same lot and we cannot live fighting each other under some pretext or other.

    ReplyDelete

Powered by Blogger.