Header Ads



எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் - ஞான­சாரர்

இஸ்­லா­மிய சமய நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்­கா­கவே நாம் போரா­டினோம். இப்­போதும் எமது நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை. இலங்­கையின் உண்­மை­யா­ன மதம் பௌத்தம் மட்­டுமே. அதை பாது­காக்க வேண்­டி­யது எம் ஒவ்­வொ­ரு­வ­ரதும் கடமை. அந்த கட­மை­யி­னையே நாம் செய்து வரு­கின்றோம் என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார் . பெளத்த சிங்­கள மக்­களை பாது­காக்க தாம் புதிய அர­சியல் பாதை­யினை உரு­வாக்­க­வுள்­ள­தா­கவும், தனித்­துவ சிங்­கள தலை­வ­ராக உரு­வா­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பொது பல சேனா பெளத்த அமைப்­பினால் கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார் . அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில் ,

இஸ்­லா­மிய முரண்­பாட்டு கோட்­பா­டொன்று பல­ம­டைந்த நிலையில் நாம் தான் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு துணை­யாக நின்றோம் . ஆனால் இன்று அர­சியல் சுய­ந­லத்­திற்­காக அவர் எங்­களை குற்­ற­வா­ளி­யாக்கி அதன் மூல­மாக மீண்டும் மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கின்றார் . சிங்­கள மக்கள் மஹிந்த அர­சாங்­கத்தை முழு­மை­யாக நம்­பிய போதிலும் பல சந்­தர்ப்­பங்­களில் ஏமாற்­றப்­பட்­டனர் . ஆனால் தமக்­கான தலைவர் மஹிந்த என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்டில் அம்­மக்கள் இருந்­தனர். எனினும் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த அர­சாங்கம் தோல்­வி­ய­டைய அவரின் அவ­சர செயற்­பா­டு­களும் அவரை சுற்­றி­யி­ருந்த கூட்­ட­முமே காரணம் .

மீண்டும் மக்­களை ஏமாற்றி ஆட்­சியை கைப்­பற்ற திட்டம் தீட்­டு­கின்றார் . ஆனால் எமது அமைப்பு மக்­களை மட்­டுமே இலக்கு வைத்து செயற்­பட்­டதே தவிர அர­சி­யலை இலக்கு வைக்­க­வில்லை. எனினும் நாம் இப்­போது எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம்.

இத்­தனை கால­மாக பொது­பல சேனா அமைப்பு சிங்­கள கொள்­கை­யினை பலப்­ப­டுத்த என்ன செய்­ததோ அதே செயற்­பா­டு­களை விட்ட இடத்தில் இருந்து ஆரம்­பிக்­க­வுள்ளோம். எமக்­கான புதிய அர­சியல் பாதை­யினை ஆரம்­பித்து அத­னூ­டாக சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­கான தனித்­துவ தலை­மை­யினை ஆரம்­பிப்­பதே எமது நோக்­க­மாகும். அதற்­கான அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­துள்ளோம். நாம் யாரையும் ஆத­ரிக்­கவோ அல்­லது யாரு­டைய துணை­யு­டனும் பய­ணிக்க வேண்­டிய அவ­சியம் இல்லை .

இலங்­கையின் உண்­மை­யா­ன மதம் பௌத்தம் மட்­டுமே. அதை பாது­காக்க வேண்­டி­யது எம் ஒவ்­வொ­ரு­வ­ரதும் கடமை. அந்த கட­மை­யி­னையே நாம் செய்து வரு­கின்றோம் .

எனவே இப்­போது நாம் எடுத்­தி­ருக்கும் முடிவுகள் மிகவும் ஆரோக்கியமானது மட்டும் அல்லது சிங்கள பெளத்த மக்கள் எதிர்ப்பார்க்கும் முடிவும் இதுவே . அதேபோல் எமது புதிய பயணத்தில் தமிழ் ,முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நாம் தயார் . அதேபோல் எமது செயற்பாடுகள் யாருக்கும் கட்டுப்பட்டதல்ல , நாம் யாருக்கும் அடிபணிந்து செயற்படப் போவதும் இல்லை என்றார்.

10 comments:

  1. டேய் எருமைமாடு சிங்ஹல மக்கள் நல்லாத்தாண்ட இருக்கிறார்கள் உனக்கு பைத்தியம் என்பது எல்லோரும் அறிந்து வைத்து இருக்கிறார்கள் ஆனால் இலங்கை அரசும் போளிசும்தான் உனக்கு பைத்தியம் என்பதை இன்னும் அறியவில்லைபோலும் கூடிய விரைவில் அவர்களும் அறிந்து விடுவார்கள் அப்போது உன் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும். அதற்க்கு முன் உன்மீது சுமத்தப்பட்டுள்ள அறுபத்தினாலு வழக்கும் உன்னை மாமியார் வீடு அனுப்பிவைக்கும் என்பதை அறிந்துகொள்

    ReplyDelete
  2. start to feel the smell of count down.

    ReplyDelete
  3. இரண்டு விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    1. ஞான சாரர் அவருடைய பாதையில் போகட்டும். நாம் எமது பாதையில் போவோம். அவர் எம்மை இணைத்துக் கொண்டு அவர் செல்ல வேண்டிய எத்தேவையுமில்லை. சுயநலத்துக்காகவே இந்த முயற்சி. 2. எமது ஆயுதம் பிரார்த்தனை. நாம் பல் வேறு விதமாக அல்லாஹ்விடம் எமது நாட்டின் நிலை குறித்து மன்றாடினோம். பல பேர் ''அல்லாஹும்ம ஷத்தித் ஷம்லஹும், வபர்ரிக் ஜம்அஹும்'' எனப் பிரார்த்தித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் கருத்து யாது? யா அல்லாஹ்! இவர்களின் ஒற்றுமை சீர்குலைப்பாயாக, இவர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவாயாக. பார்த்தீர்களா கைகோர்த்து முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியெல்லாம் நடக்க முடியுமோ அப்படி எல்லாம் நடந்த இவர்களின் தற்போதுள்ள நிலையை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete
  4. if you want muslim in your side take NFF muzammil and we will give wimal weerawansa free.

    ReplyDelete
  5. if you want muslims you can take NFF party muzamil and Azwar and also mazoor moulana ( kalutturai )

    ReplyDelete
  6. Watch u r face in the mirror and double check it?????????

    ReplyDelete
  7. லண்காகூல் சொல்லவது செரி இந்த துஆவை கேட்காத முஸ்லிம் இல்லை (கொழும்பு முசம்மிலை தவிர )

    ReplyDelete
  8. இவனட வைல செருப்பால அடிக்க ஆள் இல்லையா மூங்ஜியும் முகரக்கட்டையும்

    ReplyDelete
  9. Water and oil will not mix together Mr Gnanasara!

    ReplyDelete
  10. Fool bbs seek muslim community to get beat

    ReplyDelete

Powered by Blogger.