Header Ads



வீதிக்கு வந்த சந்திரிக்கா

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாதுலுவாவே தேரரின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது:-

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதால் தான் திட்டமிட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.