யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் பங்களா - மைத்திரி பார்வையிட்டார் (படங்கள்)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக யாழ். காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடம்பர சொகுசு பங்களாவை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இன்றைய தினம் 03-03-2015 யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்திற்குச் செல்வதற்காக காங்கேசன்துறை ஊடாக பயணித்திருக்கின்றார். இதன்போதே குறித்த பங்களாவை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
Post a Comment