Header Ads



மஹிந்தவின் ஆட்சியில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மோசடி - கணனி ஹெக்கர்களின் உதவிபெற நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சில மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கையூட்டல் ஊழல் மோசடிகளை கண்டு பிடிப்பதில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது.

கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு கணனி ஹெக்கர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண தேவை ஏற்பட்டால் வெளிநாட்டு கணனி நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1 comment:

  1. கண்டு பிடித்துத்தான் என்ன பயன்? கண்டுபிடித்து என்றும் செய்ய மாட்டார்கள், சும்மா அறிக்கை விடுவதுடன் சரி, அவ்வளவுதான்.

    வேலே சுதா கூட விரைவில் விடுதலையாகக் கூடும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.