மஹிந்த ராஜபக்ஸவின் உறவினரை கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படுகிறது
முன்னைய ஆட்சியின் போது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் மேற்கொண்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இரண்டு குழுக்களும் தனித்தனியே தமது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.
இந்தக்குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தும் என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரேனில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ரஸ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவை கண்டுபிடிக்க சர்வதேச பொலிஸாரின் உதவியை அரசாங்கம் நாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உதயங்க வீரதுங்க மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment