Header Ads



மஹிந்தவுக்கு, மைத்திரி பதிலடி - பாதுகாப்புக்காக ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு நண்பரின் வீட்டில் தங்கினேன்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு இவ்வாறான ஓர் கோரிக்கையை யாரும் இதுவரையில் தன்னிடம் முன்வைக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான கோரிக்கை அல்லது யோசனையை முன்வைத்தால் அன்று நான் உரிய பதிலை அளிப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயம் தாமே என மஹிந்த தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவியதற்கு உண்மையில் கட்சியின் இதயம் மக்களே என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயமும் மூளையும் மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனது குடும்ப உறுப்பினர்களினது பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு நான் குருணாகல் பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் என்னைக் கைது செய்து, குடும்ப உறுப்பினர்களை அழிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.

தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் நான் உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இருந்திருப்போமா என்பது தெரியவில்லை. அதுதான் மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயகமாகும். ஆனால் அவர் இப்பொழுது ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அன்றைய தினம் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், எத்தனை பேரின் கை கால்கள் உடைக்கப்பட்டிருக்கும், எத்தனை பேரின் தொழில்கள் இழக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாது. அப்படி இல்லை என்றால் மகிந்த ராஜபக்ச எனது முழு குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழித்திருப்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


1 comment:

Powered by Blogger.