Header Ads



இலங்கையிடம் அனுமதி, கேட்கிறது அமெரிக்கா

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக, புதிய வசதிகள் மற்றும் தொழினுட்பங்களுடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக தரத்திற்கு சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழினுட்ப உதவிகளை வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகார ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, புத்தாக்க சக்திவலு உற்பத்தி மற்றும் சூரிய சக்தியுடனான மின்சார உற்பத்தி தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.