Header Ads



நல்லிணக்கம் தொடர்பான, ஜனாதிபதி செயற்படையணி ஸ்தாபிக்கப்பட்டது

நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி செயற்படையணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடனான இனம் ஒன்றை கட்டியெழுப்புவதே அதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவராக சாலி ஜயவர்த்தன செயற்படவுள்ளதோடு ஜாவுட் யூசுப், கந்தையா நீலகண்டன், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கலாநிதி ராம மாணிக்கலிங்கம், ரியன்சி அர்ச குலரத்ன மற்றும் பிரியந்தி பெனாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.