Header Ads



சமய நிகழ்ச்சிகள் என்ற போர்வையில், பொது வைபவங்களில் கலந்துகொள்ளும் மஹிந்த

-நஜீப் பின் கபூர்-

ஐனாதிபதி ஜமத்திரிக்கும் முன்னாள் iனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான சுதந்திரக் கட்சி மற்றும் நாட்டில் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றுவது தொடர்பான நேரடி மோதல் மிக விரைவில் துவங்கும் அறிகுறிகள் தற்போது தென்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் நேரடியாகத் தலைமைத்துவத்தை மிக விரைவில் தனது கையில் எடுத்துக் கொள்ள இருக்கின்றார் என்று எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கினறது.

பொதுத் தேர்தலுக்கான அழைப்புக் கொடுக்கப்பட்டதும். இது நிகழும். அதுவரைக்கும் அதற்கான பின்னணியை ஏற்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவர் தற்போது சமய நிகழ்ச்சிகள் என்ற போர்வையில்  பொது வைபவங்களில் கலந்து கொள்கின்றார் அண்மையில் ருவன்வெல்லையில் நடந்த ஒரு வைபவத்திற்கும் அவர் போய் இருக்கின்றார். அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சியம்பலாபிட்டிய, மித்ரபால ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.