'நாட்டில் நல்லிணக்கத்தை முன்னெடுக்க, இதயசுத்தியுடனான செயற்பாடுகளை முன்னெடுப்போம்'
இலங்கையின் புதிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை செயற்பாடுகளை முன்னெடுக்கவும் மனித உரிமையையும் சமாதானத்தையும் நிலைநாட்டவும் வெளிப்படையானதும் இதயசுத்தியுடனானதுமான செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதற்கு சர்வதேச ஆதரவையும் பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு சீனா வழங்கிவரும் உதவிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின்னுடன் மேற்கொண்ட இருதரப்பு சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் வெற்றிகரமான விஜயம் ஒன்றை சீனாவுக்கு மேற்கொண்டுள்ளார் என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment