Header Ads



மாட்டிறைச்சி விற்பனை செய்தால் சிறை தண்டனை - ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார்

(India) மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும், அம்மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மாட்டிறைச்சி விற்போருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சி செய்தபோது, 1995ம் ஆண்டு, அம்மாநில சட்டமன்றத்தில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இம்மாநிலத்தில், 1976ம் ஆண்டு முதல் பசுக்கொலை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டப்படி, தற்போது காளை மாடு மற்றும் கன்றுக்குட்டியை வெட்டுவதும் குற்றமாகும். ஆட்டிறைச்சியின் விலையை விட, மூன்று மடங்கு விலை குறைவான மாட்டிறைச்சியை, ஏழை மக்கள் வாங்குவதாகக் கூறியுள்ள மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.