Header Ads



சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

பொருளாதார அபிவிருத்தி அமைசசின் கீழ் இணைத்துக் கொள்ளப்ட்ட சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அரச பொது நிருவாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரம்  கடந்த 18ஆம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள 14023 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக  வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் செயலாளர் பி.எச்.எல்.பெரேராா சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் இவர்கள் அனைவரும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய மற்றும் பிரதேச  அபிவிருத்தி பொருளாதார திட்டமிடல் அமுலாக்கல் வறுமை ஒழிப்பு பிரிவின் கீழ்  உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை இவர்களுக்கான புதிய கடமைப்பட்டியல் அறிவிக்கப்படும் வரை இவர்கள் தற்போது மேற் கொண்டு வரும் கடமைகளை தொடர்ந்தும்  மேற் கொள்ளுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது,

No comments

Powered by Blogger.