Header Ads



இரத்தினபுரியில் நாகப் பாம்புகள் படையெடுப்பு - பொலிஸாரின் உதவியை நாடியுள்ள மக்கள் (வீடியோ)

இரத்தினபுரி கொடகவெல- யஹலவெல கிராமத்தில் கடந்த சில நாட்களாக அதிகளவில் பாம்புகள் படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நாகப்பாம்புகளை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

நிலமை எல்லை மீறி போனதைத் தொடர்ந்து தமக்கு உதவுமாறு பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாம்புகளைப் பிடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் கடந்த 3 தின ங்களில் 10 நாகங்களை பிடித்துள்ளார். இவர் பிடித்த நாகங்கள் ஒவ்வொன்றும் 5 முதல் 6 அடி நீளமானவையென தெரிவிக்கப்படுகின்றது.

அவ்விளைஞன் நாகமொன்றினைப் பிடிக்கும் காட்சியும் கையடக்கத்தொலைபேசியொன்றில் பதிவாகியுள்ளது. 

(வீடியோ)

No comments

Powered by Blogger.