முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் - காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என பொது ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருந்தார்.
அதன்படி ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மோட்டார் சைக்கிளை செலுத்துவோரோ அல்லது பின்னால் அமர்ந்து செல்பவரோ முகத்தை முழுமையாகமறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து பயணித்தால் அவர்களுக்கு எதிராக உடன் தண்டப் பண பத்திரம் பொலிஸாரினால் வழங்கப்படும்.
மோட்டார் வகன சட்டத்தின் 158 ஆவது அத்தியாயத்தின் 2 ஆவது மற்றும் மூன்றாவது உப பிரிவுகளின் கீழும் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 644ஃ 26 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்தமானி அறிவித்தலின் கீழும் 2015 ஆம் ஆண்டின் தண்டப்பண அதிகரிப்பு சட்டத்தின் கீழும் இந் நடவ்டிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சாதரணமாக பயன்படுத்தப்படும் தரமான தலைக் கவசங்களில் முன் பக்கமாக வைசர் எனப்படும் திறையினை பயன்படுத்த தடை இல்லை. அப்படி வைசர் திரையை பயன்படுத்துவதானால் அது பல் வர்ணங்களைக் கொன்டதாக இருக்க முடியாது என்பதையும் சட்டம் குறிப்பிடுவதுடன் முகம் தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
1983 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 245 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களை 25 மீற்றர்களுக்கு அப்பால் இருந்தே தெளிவாக அவதானிக்க கூடியதாக தலைக்கவசங்கள் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத் திட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முகத்தை மறைப்பது பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு எதுவாக இருக்கின்றது. முகத்தை கட்டாயமாக தடை செய்யப்படல் வேண்டும்.
ReplyDeleteஹஜ்ஜு, உம்ராவின் பொழுது கூட முகத்தை மறைப்பதை இஸ்லாம் கட்டாயமாக தடை செய்துள்ளது.
senseless people
ReplyDelete