Header Ads



''இன்று தீர்மானம் எடுப்போம்'' அனுரகுமார திஸாநாயக்க

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நிறைவேற்று பேரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை இன்று திங்கட்கிழமை எடுக்கவுள்ளோம் என்று  மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தேசிய நிறைவேற்று பேரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லாயா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலர், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறி பாலடி சில்வா, எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்றத்தில் செயற்படுவது பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.