புதிய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு, மஹிந்தவை தலைவராக்க முயற்சி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் போட்டியிடுவதற்கு தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய விடுதலைமுன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர், இந்த கூட்டணியில் முக்கிய பங்காற்றுவார்கள் எனவும் தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 18 கட்சிகளின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளதாகவும், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை இவர்கள் ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிவிப்பு எதனையும் விடுப்பதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வீதியிலிறங்குவதற்கு தீhமானித்துள்ளதாகவும் , இதன்படி 16 ம் திகதி ஹொரனையில் ஆர்ப்பாட்மொன்று இடம்பெறும் எனவும் சுதந்திரக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தான் நினைத்தபடி செயற்பட அனுமதிக்க முடியாது. அவ்வாறு அவர்கள் செயற்பட்டால் என்னசெய்வது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கின்றது, எனினும் பல ஊழல் அரசியல்வாதிகள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்க கூட்டமைப்பின் உறுப்பினர் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில தனக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க்ப்படாவிட்டால் தான் அடுத்த கட்டட நடவடிக்கையை மேற்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிறைக்கைதியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூ....வானம்.....
ReplyDelete