தகவல் கொடுத்து, பரிசுகளை வெல்லுங்கள்..!
பண்டிகை காலங்களில் நுகர்வோர் சட்டங்களை மீறுகின்ற வர்த்தகர்கள் தொடர்பில் சரியான தகவல்களை தருகின்றவர்களுக்கு பணப்பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தல் மற்றும் நுகர்வோருக்கு பாவனைக்கு உதவாக பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் தகவல்களை தருகின்ற நுகர்வோர் தொடர்பிலான தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரசபை அறிவித்துள்ளது.
கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் உடனடி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக புதிய பிரிவொன்று ஏற்படுத்தப்படும் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது,
நுகர்வோர் சட்டத்தை மீறுகின்ற வர்த்தகர்கள் தொடர்பில் 011-3134446, 011-7755481, மற்றும் 077-1088922 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்கலாம் என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
நல்ல முயற்சி.
ReplyDelete