பாழ்ப்பாண முஸ்லிம்களை கண்டுகொள்ளாத அமைச்சர் சுவாமிநாதன்
-farook sihan-
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த மீள்குடியேற்ற மற்றும் இந்துக்கலாச்சார அமைச்சர் சுவாமிநாதன் யாழ் முஸ்லீம் மக்களை பார்வையிட வில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
கடந்த சில தினங்களிற்கு முன்னர் ஐந்து சந்திப்பகுதியில் அப்பகுதி மக்கள் இந்திய வீட்ட திட்ட பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் யாழின் பல பகுதிக்கு அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பல இடங்களிற்கு சென்ற அமைச்சர் முஸ்லீம் மக்கள் உள்ள பகுதியை எட்டிப்பார்க்க வில்லை.
1990 ஆண்டு திடிரென விடுதலை புலிகளினால் விரட்டப்பட்ட மக்கள் பலர் இன்று கூட குடியேறி அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நேற்றைய தினம் மானிப்பாய் பகுதியில் நடைபெற்ற அமைச்சருக்கான கௌரவிப்பு நிகழ்விற்கு முஸ்லீம் மக்கள் உள்ள பகுதியை கடந்து அவர் சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment