Header Ads



முஸ்லிம் அமைச்­சர்கள் இஷ்­டப்­படி துள்ளுகின்­றனர், அவர்களை எச்சரிக்கிறோம் - எமது அலை இன்னும் ஓய­வில்லை

நாட்டில் எல்லா பாகங்­க­ளிலும் சிங்­க­ள­வர்கள் மீள்­கு­டி­யேற முடியும். அதனை எதர்ப்­ப­தற்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் யார்? தற்­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மிகவும் மோச­மாக செயற்­ப­டு­கின்­றனர். எம்­முடன் விளை­யாட வேண்டாம். நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை சினம் கொள்ள செய்­ய­வேண்டாம். அவ்­வா­றாயின் எதிர்­காலம் மிகவும் மோச­மாக அமையும் எனவும் பொதுபலசேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் எச்­ச­ரித்தார்.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அந்த அமைப்பின் காரி­யா­ல­யத்தில்   இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே தேரர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

யுத்தம் இடம்­பெற்ற பிற்­பாடு வடக்கில் தமிழ் ,முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­றிய போதும் சிங்­க­ள­வர்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. பல்­வேறு அழுத்­தங்­களின் பிற்­பாடு வெலி­ஓ­யாவில் சிங்­க­ள­வர்கள் 5000 பேர் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டனர். எனினும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சிங்­க­ள­வர்­களை மீள­கு­டி­யேற்­றிய அதி­கா­ரி­களை மிரட்­டி­யுள்ளார். இதற்கு எதிர்ப்பும் வெளியூட்­டுள்ளார்.

நாட்டில் பெரும்­பான்மை இனத்­த­வ­ரான சிங்­க­ள­வர்கள் நாட்டில் அனைத்து பாகங்­க­ளிலும் குடி­யேற முடியும். அதனை எவ­ராலும் கேள்­விக்கு உட்­ப­டுத்­த­மு­டி­யாது. எனவே வெலி­ஓயா குடி­யேற்றம் தொடர்பில் எதி­ர்ப்­பினை வெளியி­டு­வ­தற்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் யார்? அவ­ருக்கு என்ன தகுதி உள்­ளது. சிறுப்­பான்மை மக்கள் அனைத்து சுதந்­தி­ரங்­க­ளையும் பெற்று வாழ­வேண்டும். பௌத்­த­ர­களின் உரி­மைகள் கிடப்பில் போடப்­பட்டால் அது தவ­றில்லை. இதுவா நல்­லாட்சி.

அத்­தோடு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­றிய போது பல்­வேறு ஊழல் மோச­டி­களை செய்­துள்ளார். இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த விசா­ர­ணையை உரிய முறையில் முன்­னெ­டுத்து அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

இதே­வேளை தற்­போது முஸ்லிம் அமைச்­சர்கள் மிகவும் மோச­மான முறையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். தமது இஷ்­டப்­படி துள்ளுகின்­றனர். எனவே குறித்த அமைச்­சர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கிறோம். நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் விளை­யாட வேண்டாம். எம்­முடன் விளை­யா­டினால் பாரிய விளைவை எதிர்­கா­லத்தில் சந்­திக்க நேரிடும். எமது அலை இன்னும் ஓய­வில்லை.

2 comments:

  1. Before Minister Badurdeen's issue, this Gnanasara should be sent to jail for all the Crimes he commited! Where Is the law enforcementent authorities of the Yahapalanaya?

    ReplyDelete
  2. ஞான சாரரே! உமக்கு தீணி போட்டு வளர்த்து உன்னைக் கடாவாக்கிய கோத்தா எங்கே? ராஜபக்சா எங்கே? இருக்கும் ஆத்திரத்துக்கு சும்மா கத்திக் கத்தி இருக்க வேண்டியது தான். பைத்தியக் காரத்தனமாக அறிக்கை விட்டு விட்டு காலத்தைக் கடத்து. உனது கருத்துக்களை யாரும் எடுப்பதும் இல்லை. உன் பேச்சை பைத்தியமாக அரசாங்கமே கருதும் நிலைதான். மைத்திரியை வெற்றி பெற பாரிய செல்வாக்குச் செலுத்திய உமது கதை இது தான் ஞானா. ஹிஹ் ஹிஹ்ஹீ

    ReplyDelete

Powered by Blogger.