Header Ads



'இரா­ஜி­னாமா செய்வேன்' - ஜனா­தி­பதி மைத்திரி எச்சரிக்கை

(Vi)

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்­றது. 

புதிய அர­சாங்­கத்தின் இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்­தினை ஆத­ரிப்­பது தொடர்பில் இந்தக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போது கருத்து தெரி­வித்த பல உறுப்­பி­னர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுயா­தீ­ன­மாக முடி­வினை எடுப்­ப­தற்கு எமக்கு தலைமை அனு­மதி வழங்க வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ர­வாக மட்டும் நாம் செயற்­ப­ட­மு­டி­யாது. இவ்­வி­ட­யத்தில் எமது நிலைப்­பாட்­டுக்கு கட்­சியின் தலைமை இணங்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் கலைக்­காது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கொண்­டு­செல்ல வேண்டும். தற்­போது தேசிய அர­சாங்­கமே ஆட்­சியில் உள்­ளது. எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என்றும் பல உறுப்­பி­னர்­களும் இந்தக் கூட்­டத்தில் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­க­ளை­ய­டுத்து உரை­யாற்­றிய ஜனா­தி­ப­தியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன, இடைக்­கால வர­வு­செ­லவுத் திட்டம் தொடர்பில் நீங்கள் விரும்­பி­ய­வாறு கருத்­து­களை, விமர்­ச­னங்­களை தெரி­வித்­தி­ருக்­கலாம். ஆனால் வரவு செலவுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று கட்­சியின் தலைமை முடி­வு­செய்­துள்­ளது. எனவே இந்த முடி­வுக்கு அனை­வரும் கட்­டுப்­ப­ட­வேண்டும்.

அவ்­வாறு கட்­சியின் தலை­மைக்கு நீங்கள் கட்­டுப்­ப­டா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நான் இரா­ஜி­னாமா செய்து ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை உரு­வாகும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்திலேயே வரவுசெலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 163பேர் வாக்களித் திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. பாம்புகள் என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.

    விஷமிருக்கிறதோ இல்லையோ, பிறரைத் தீண்டும் நோக்கமில்லாதிருந்தாலும் பாம்புகள் அவ்வப்போது சீறிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் அச்சம் தெளிந்து ஆளாளுக்கு மிதித்து துவம்சம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.