நுகேகொடையில் மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டம், ஐக்கிய தேசிய கட்சிக்குத்தான் சவால் - சுசில் பிரேமஜயந்த
நுகேகொடை நகரில் நடைபெற்ற “மஹிந்தவுடன் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு நீங்கள் தயாரா” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டமானது பாரிய வெற்றியாகும். இதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு எவ்வித சவாலும் இல்லையென்றாலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அது பாரிய சவாலாக அமையுமென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.மஹிந்த
சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஐ.ம.சு.முவினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த பிரிவினரும் மேற்படி கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, புதிய பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
திரு சுசில் அய்யா அவர்களே
ReplyDeleteஉங்களுக்கு ராஜித அவர்கள் நல்ல பதில் ஒன்று வழங்கியிருக்கிறார்
Next defeating condidate mr susil.apa saranai
ReplyDeletePeople like you who sent MR home, don't perform the same tactics to sabotage Mithri, don't they have shame !
ReplyDelete