சற்றுமுன் பைசர் முஸ்தபா இராஜினாமா செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு பறந்தார்
விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா சற்று முன்னர் 01-02-2015 தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வௌிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தகவல் வௌியாகியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக Ad இன்று முற்பகல் வினவியபோது பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment