Header Ads



கெஞ்சினார் மொஹான் பீரிஸ், மறுத்தார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதுபற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் காலையில் மொஹான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.

தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு ஜனாதிபதி அதற்கு மறுத்து விட்டதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளது.

மொஹான் பீரிசின் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளியாது என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஒரு கற்பனை உரையாடல்:

    " எதற்கு ஸேர், இன்னொருவரெல்லாம் , நானே இருந்து விடுகின்றேனே..?"

    -வேண்டாம், நீங்கள் விலகிச் சென்று விடுங்கள்.

    "என்ன காரணத்திற்காக வேண்டாமென்கிறீர்கள் ஸேர்? நானும் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதிதானே.. நீங்கள் என்னைத் தொடர்ந்திருக்க அனுமதித்தால் உங்களுக்கு வேண்டிய வகையில் தீர்ப்புகளை வழங்குவேனே ஸேர்."

    -அப்படியா? உங்களை நான் அனுப்புவதற்குரிய முக்கிய காரணத்தை இதோ நீங்களே உங்கள் வாயால் கூறிவிட்டீர்கள். நீங்கள் போகலாம்.

    ReplyDelete

Powered by Blogger.