வெலே சுதாவைக் கொலை செய்யத் திட்டம் - சோபித்த தேரர் பொலிஸ் மாஅதிபருக்குக் கடிதம்
(Nf.lk)
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமார வை கொலை செய்வதற்கான திட்டம் ஒன்று உள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலே சுதாவினால் இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வௌியிடப்படுகின்றமையினால், சாட்சியங்களை இல்லாது செய்யும் நோக்கில் அவரைக் கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்படுகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தேரர் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையொன்று ஏற்படுவதனை தவிர்த்துக்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment