எனது தந்தையை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேன் - ஹிருணிக்கா
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த மற்றும் கொலன்னாவையை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இன்று (27) நடைபெற்ற பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் 59 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று கொலன்னாவையில் உள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு அருகில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
Post a Comment