துமிந்த சில்வாவின் சகல கணக்குகளையும், சோதனைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பெயரில் நிதி நிறுவனங்களிலுள்ள அனைத்து கணக்குகளையும், சோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
வெலே சுதா எனப்படும் போதைப்பொருள் வர்த்தகருடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரது கணக்குகளை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அத்துடன், துமிந்த சில்வா நாட்டை விட்டு வௌியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment