Header Ads



தங்கச் சாமியார் 60 நிமிடத்தில் 49 இலட்சம் ரூபா செலுத்தி விடுதலையானார் - கண்டியில் சம்பவம்

-JM.Hafeez-

தங்கச் சாமியார் என்றழைக்கப் படும் கண்டி, கால்தென்ன காமினி ஆணந்த என்ற பிரபல சாமியார் வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 49 இலட்சம் ரூபாவைச் செலுத்தியுள்ளார்.

பண்டி, அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும இவர் காளி தேவதை அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்மாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு இவர் சர்வசாதாரணமாக வலம் வருவார்.

இவர் பல வருங்களாக வருமான வரி செலுத்த வில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் கண்டி நீதவான் சிரிநீத் விஜேசேக்கர ரூபா 488 6840 அபராத்ததை விதித்தார்.

இருப்பினும் சுமார் ஒரு மணி நேரத்தில்அப்பணம்முழுவதும் செலுத்தப்பட்டு அவர் விடுதலையாகி உள்ளார்.


No comments

Powered by Blogger.