Header Ads



1925 இலட்சம் செலவு, 500 இலட்சமே செலுத்தப்பட்டது

-எம். எஸ். பாஹிம்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட இ. போ. ச. பஸ்களுக்காக 1425 இலட்சம் பணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அதனை மீள் வழங்காவிட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் பிரசாரங்களுக்காக இ. போ. ச. பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக 1925 இலட்சம் ரூபா வழங்க வேண்டும். ஆனால் இதுவரை 500 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 1425 இலட்சம் ரூபாவை துரிதமாக வழங்குமாறு எழுத்து மூலம் கோரியுள்ளோம். கடந்த 3 மாதங்களாக இ. போ. ச. ஊழியர்களுக்கு நிலுவை கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இதற்காக 1550 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

இ. போ. ச.வுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவை மீள வழங்கினால் இந்த நிலுவைகளை திருப்பி வழங்க முடியும். போக்குவரத்து அமைச்சில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்க இருக்கிறோம். இவை குறித்து தகவல் திரட்டப்படுகிறது.

1 comment:

  1. ஐயோ பாவம்; நாட்ட விட்டு ஓடியிருக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.