Header Ads



''மஹிந்தவை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தி, தாம் எதிர்ப்பார்த்தவைகள் நாட்டுக்கு நடக்கவில்லை''

அகில இலங்கை மத்திய கிழக்கு தொழிலாளர் சங்க அமைப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொது வேட்பாளரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் உறுப்பினர்கள் இதனை கூறியுள்ளனர்.

ஒரு லட்சத்து 49 ஆயிரம் உறுப்பினர்களையும் 52 கிளை அமைப்புக்களை கொண்ட தமது அமைப்பு கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற செய்ய பாடுபட்டதாகவும் தமது அமைப்பின் 7வது மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றதாகவும் அமைப்பின் தலைவர் ரஞ்சித் நாணயக்கார தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தி தாம் எதிர்ப்பார்த்தவைகள் நாட்டுக்கு நடக்கவில்லை எனவும், போருக்கு பின்னர் அரசாங்கம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.