Header Ads



இறந்த பெண் வயிற்றில், 3 மாதங்களாக குழந்தையை வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள்

இத்தாலி: 36 வயது நிரம்பிய பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண் இத்தாலியிலுள்ள மில்லன்ஸ் சான் ரஃபேல் உடல் திடீர் உடல்நலகுறைவால் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்லப்படுகிறார். அவர் ஒரு 6 மாத கர்ப்பினி. அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். 

உடனடியாக மருத்துவர்கள் ஆலோசித்தனர். குழந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தனர். அந்த பெண்ணின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தினை மருத்துவ கருவிகளின் உதவி கொண்டு செயற்கையாக இயக்க முடிவு செய்தனர். கடந்த 3 மாதங்களாக மருத்துவ கருவிகளுக்குள் செயற்கையாக உடல் உறுப்புகளை இயங்கச்செய்து இந்த மூன்று மாதங்களில் அந்த தாயின் இரைப்பையின் வழியாகவே அந்த குழந்தைக்கு உணவு வழங்கினர். கடந்த 18, டிசம்பர் 2014 அன்று 9 மாதம் நிறைவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் சிசேரியன் செய்து அந்த ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்தனர். குழந்தை 1.8 கிலோ எடையுடன் பிறந்தது.

No comments

Powered by Blogger.