Header Ads



மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்படும் - ஆனந்த சங்கரி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்பட உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் எதனையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்காது புதிய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, ஆனந்த சங்கரி பல தடவைகள் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Gtn

No comments

Powered by Blogger.