Header Ads



அரசாங்கம் முன்வைக்கும் பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் - மைத்திரிபால

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கும் பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்குரணையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் நன்றாக தெரியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என்று.

தோல்வியடைவதன் காரணமாக, மக்கள் மத்தியில், தவறான  பிரசாரங்களை கொண்டு செல்கின்றனர்.

தாம் எப்படியாவது வெல்வோம் என கூறுகிறார்கள்.

தாம் எதவாது செய்து வெற்றி பெறுவோம் என கூறுகிறார்கள்.

வாக்கு சீட்டுக்கள் போலியானவற்றை அச்சிட்டு, கள்ள வாக்கு போடுவதாக கூறுகிறார்கள்.

இது அனைத்தும் முற்றிலும் பெய்யானது.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதானது மக்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவதற்கே என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.