Header Ads



பொய் வாக்குறுதிகளுக்கு, மக்கள் ஏமாற்றமடைந்த யுகம் நிறைவடைந்துள்ளது - மஹிந்த

எதிர்கட்சியின் பொது வேட்பாளர் தமது கொள்கை பிரகடனத்தில் வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் அரசாங்கம் 2015 ஆம் வரவு செலவு திட்டத்தில் தற்சமயம் நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறை வீரசிங்க விளையாட்டு திடலில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மக்கள் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்த யுகம் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 60 வருடங்கள் கழிந்தும் புதிய நாடொன்றை கட்டியெழுப்ப தாம் வரும் வரை முடியாது போனது.

முன்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? இல்லையா என்பது தொடர்பிலே வாக்குறுதிகளின் பெறுமதிகளை அவதானிக்க  முடியும்.
அரச சேவையை நான் வலுப்படுத்தினேன்.

தாம் முன்வைத்த வரவு செலவு திட்டத்தை யாராலும் பறிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.