Header Ads



மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் 26 ஆம் திகதியே வெளியாகும்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னர் கூறப்பட்டது போல்  இன்று திங்கட்கிழமை வெளியிடப்படாது.  எதிர்வரும்  26 ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில்;

எதிர்வரும்  26 ஆம் திகதியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. இதனை தாமதமாக நாம் வெளியிடுவதாக கூறமுடியாது.  2005 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தலுக்கு  13 நாட்கள் இருக்கும் போதே வெளியிட்டோம் என்பதனை நினைவுபடுத்துகின்றேன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதுதொடர்பான மேலதிக விபரங்களை அடுத்த ஊடகச் சந்திப்பில் தெரிவிப்போம் என்றார். 

No comments

Powered by Blogger.