Header Ads



அம்பாறையில் ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் (படங்கள்)


(யு.எல்.எம். றியாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழைகாரணமாக பல ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மகா போகத்தின்போது சுமார் 73 ஆயிரம் ஹெக்டேயர் நிலத்தில் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளது விதைத்து ஒரு மாதத்திற்குட்பட்ட நெற்பயிர்களே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்ச்சியாக சீரற்ற  காலநிலை நீடிக்கும் பட்சத்தில் மேலும் நிலைமை மோசமடையும் சாத்தியங்கள் தற்போது இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது. இதேவேளை தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேல் வேளாண்மை வெள்ளத்தில் மூழ்கும் பட்சத்தில்  பயிர் அழிகி அழிவடையும் நிலைமையும் ஏற்படும் என விவசாய போதனாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



No comments

Powered by Blogger.